Friday 30 September 2011

விஜய் டி.வி. செய்�� போஸ்ட் மார்ட்டம்!



நேற்று இரவு விஜய் டி.வி. யில் சூப்பர் சிங்கர் முடிவுகளின் போஸ்ட் மார்ட்டம் நடை பெற்றது.வழக்கமான மூன்று நீதிபதிகளுடன், மேலும் 26 பேர் சேர்ந்து,மொத்தம் 29 நீதிபதிகள் இறுதிப் போட்டியில் மதிப்பெண் போட்டார்களாம்.அந்த மதிப்பெண்கள் வெளியிடப்பட்டதோடு,பல நீதிபதிகள் ஒவ்வொரு போட்டி யாளரின் அன்றைய திறமை வெளிப்பாடு பற்றியும் கருத்துக் கூறினார்கள்.



நேற்று,சாய் சரண் மற்றும் சத்தியப் பிரகாஷ் இருவரது பாட்டுக்களுக்கும் கருத்து வெளியிடப் பட்டது.அனைவரும் சத்தியப்பிரகாஷை மிகவும் புகழ்ந்து,அவருக்கே அதிக மதிப் பெண்கள் கொடுத்து மகேசன் தீர்ப்பைக் கேலிக்கூத்தாகி ,வெற்றி பெற்றவர் முகத்தில் கரி பூசினர்!சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்(வாக்கு வித்தியாசம்) முட்டாள்களாக்கப் பட்டனர்.இதில் அதீத உணர்ச்சி வெளிப்பாடுகள் வேறு.சத்யா தோற்றதில் அவர்கள் அனைவருக்கும் வருத்தம்,விஜய் டி.வி. உட்பட என ஒருவர் சொல்ல ,ஒருவர் கண்ணீர் சிந்த,ஒரே நாடகம்!மக்களின் வாக்குகளே முடிவைத்தீர்மானிக்கும் என முடிவு செய்த பின் இத்தனை நீதிபதிகளும் மதிப்பிடுதலும் எதற்காக?.



இன்றும் இது தொடரும்.பூஜாவுக்காகக் கண்ணீர் சிந்துவார்கள். சந்தோஷைப் பின் தள்ளுவார்கள்.



சத்யா மிகச்சிறந்தபாடகர் என்பதில் இரண்டாவது கருத்தில்லை. பரிசுக்குத் தகுதியானவரே!ஆனால் ஏற்கனவே போட்டி முடிந்து,பரிசுகள் கொடுக்கப்பட்டு விட்ட நிலையிலே,இப்படி ஒரு போஸ்ட் மார்ட்டம் தேவையா என்பதே என் கேள்வி. எஸ்.எம்.எஸ்ஸிலும் ஃபோன் காலிலும் வரும் வருமானம் வேண்டும்,அதற்காக மக்கள் தீர்ப்பு;ஆனால் அது பற்றி ஒப்பாரியும் வைப்போம் என்றால் எப்படி?



பேசாமல் அடுத்த முறை 50 நீதிபதிகளை வேண்டுமானால் வைத்து முடிவைத் தீர்மானிக்கட்டும்.



மகேசன் தீர்ப்பு வேண்டாம்!



http://tamil-cininews.blogspot.com



  • http://tamil-cininews.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger