Tuesday 13 December 2011

அனுஷ்கா... ஆந்திரா... அவிழாத மர்ம முடிச்சு!

 
 
 
 
 
நடிகை தமன்னா எப்படி தமிழ் சினிமாவில் இருந்து விலகி ஆந்திராவுக்கு ஓடினாரோ... அதேபோல நடிகை அனுஷ்கா ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஓடி வந்திருக்கிறார். தமன்னா விவகாரத்தில் மர்ம முடிச்சு பெரிதாக இல்லை; ஆனால் அனுஷ்கா விவகாரத்தில் அவிழாத மர்ம முடிச்சு இருப்பதாக ஆந்திர திரையுலகம் கூறுகிறது. 2012 முழுக்க நான் தமிழில் மட்டுமே நடிக்கணும். ஆந்திரா வேணாம். அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க என்று தனது மேனேஜரிடம் கூறியிருந்தாராம் அனுஷ்கா. அதன்படி பல்வேறு தமிழ் படங்களில் கமிட் ஆகியிருக்கிறார்.
 
அனுஷ்கா தமிழுக்கு ஓடி வந்த விவகாரத்திற்கு பின்னால் இருக்கிற காரணத்தையும், சமீபத்தில் அவர் வீட்டில் நடந்த இன்கம்டாக்ஸ் ரெய்டுக்கும் முடிச்சு போடுகிறார்கள் விவரமறிந்தவர்கள். மிகப்பெரிய அரசியல்வாதி ஒருவரின் தூண்டுதலின்படிதான் இந்த ரெய்டு நடந்ததாம். அவர் ஆந்திராக்காரர் என்பதால்தான் பொண்ணு தமிழ்நாட்டு எல்லையிலேயே தஞ்சம் புகுந்திருக்கிறார் என்கிறார்கள் அவர்கள். சிக்கல் என்னவாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு இன்னும் ஓராண்டு கொண்டாட்டம்தான்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger