Friday 21 October 2011

நான் நூறு தடவை சொன்னால்.......!!!!



டப்பா டப்பா வீரப்பா
எப்பம்டா கல்யாணம்

மாசம் பொறக்கட்டும் 
மல்லிகை பூ பூக்கட்டும்

எம்ஜியார் சண்டை
பானுமதி கொண்டை 

குளத்துல கொக்கு
கொலப்பியை நக்கு 
--------------------------------------------------------

மரங்கொத்தி புறாவே
உனக்கென்ன வேலை

காலை எழும்பனும்
பல்லு தேய்க்கணும்

வயலுக்கு போகணும்
நண்டை பிடிக்கணும்

நறநறன்னு கடிக்கனும் 
துறு துறுன்னு பீக்கணும்


-------குழந்தையில் பாடித்திரிந்த பாடல் இன்னும் நினைவில் பசுமையாக--------
----------------------------------------------------------------------------------------------------------------

இன்னும் கூடங்குளம் அணுமின் நிலையம் மூடப்பட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பதை பார்க்கும் போது, அவர்களின் அலட்சியம் மக்களை இன்னும் வலுவாக போராடசெய்யும் என்பதை ஏன் எண்ணாமல் போகிறார்கள்...!!!!


பெயரில் மட்டும்தான் காந்தியா...?? செயலில் "நீரோ" மன்னனை நியாபக படுத்துகிறார்கள், இதோ கூடங்குளத்துக்காக, கொல்கத்தாவில் அடையாள உண்ணாவிரதம் நடத்த பட்டிருக்கிறது...!!!

அடுத்ததாக கேரளாவிலும் போராட்டம் நடக்கப்போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன, மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது....??? மக்களுக்காக அரசாங்கமா அல்லது அரசாங்கத்துக்காக மக்களா...???


மமதையோடு இருக்கும் காங்கிரஸ் அரசுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறேன் இங்கே.....!!!
---------------------------------------------------------------------------------------------------------------------

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் பொது மக்களின் நம்பிக்கை இழந்துள்ளோம், இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது போன்ற நிலையில் வலுவான ஸ்திரத்தன்மையுடன் மத்திய அரசு அமைவது மிகவும் முக்கியமாகும். 

ஆனால் இந்த வழக்கில் முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில் மத்திய அரசு இல்லை. மத்திய அரசில் ஏராளமான முறைகேடுகள் மத்திய அரசை பலவீனப்படுத்தி விட்டது. இதனால் நீதித்துறை அரசுக்கு உத்தரவிடும் நிலை ஏற்பட்டுள்ளது....!!!!????


இதை சொல்றது யார் தெரியுமா...??  மத்திய அமைச்சர் சரத்பவார் சொல்றார். அப்போ அந்த லட்சனத்துலதான் காங்கிரஸ் ஆட்சி நடத்திட்டு இருக்கு...!!!! ஏ யப்பா வெள்ளைக்காரனை தாத்தா [[நேரு]] விரட்டினார், பேரன் வெள்ளைகாரியை இழுத்துட்டு வந்தார் [[நன்றி கே ஆர் விஜயன்]] ராகுல் பூந்தி அமெரிக்கா'காரியை கட்டப்போறாராம்...

ஒரு இத்தாலிக்கே நாடு தாங்கலையே, இனி அமெரிக்காவும் வந்தால் நாடு உருப்படுமா...?? இதுக்கும் வெளங்கோவன், மொட்டை பாலு இவனுக எல்லாம் காவடி எடுப்பாணுக, இவிங்களுக்கு என்ன, ஏசி கார்ல குளு குளு அயிட்டத்தோட [[அந்த அயிட்டம் இல்லை]] சுத்திட்டு இருக்கானுங்க....!!!
------------------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்து முக்கிய பிரச்சினை, நயன்தாரா பிரபு தேவா'வை விட்டு பிரிஞ்சிட்டாராம் [[நாட்டுக்கு முக்கியமான பிரச்சினைதான்]] எலேய் ஒரு படமும் கையில் இல்லாமல் மார்'கட் கந்தலாகி காலியா கெடக்கு சேச்சிக்கு, அதான் என்னத்தையாவது செஞ்சி மறுபடியும் லைம் லைட்டுக்கு வர துடிக்கிறாங்க அதுக்குதான் இந்த ஸ்டண்டு எளவு எல்லாம்...!!! இனி ஒரு பய சீண்டுவானாக்கும், ஆக அம்மணி ஸாரி சேச்சி அவுட்டே....!!!
-------------------------------------------------------------------------------------------------------------------------------

அப்புறம் நம்ம பிர்ர்ர்ர்தமர், திடீர் திடீர்னு மொட்டைமாடிக்கு ஓடிப்போயி, சத்தமா வாய்விட்டு சிரிக்கிறாராம் தனியாக, வீட்டில் சர்தாரினி நோந்துபோயி, சூன்யா பூந்திக்கு போன் பொட்டு சொல்ல அடுத்த உகாண்டா பயணம் கிளம்புராறாம் நம்ம பிர்ர்ர்ர்தமர்....!!!

----------------------------------------------என்னா ஒரு ரொமாண்டிக் சீன்-------------------------------------------


டிஸ்கி : குப்பனும் சுப்பனும் பாவங்க [[யாரு நம்மதேன்]]

"மனோ"தத்துவம் : எலியை நீ பிடிச்சா எலி காலி, எலி காய்ச்சல் உன்னை பிடிச்சா நீ காலி....

[[கேரளாவில் வேகமா எலி காய்ச்சல் பரவிகிட்டு இருக்கு]]

நீதி : எலியை கண்டால் தூரவிலகு... 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்பு நண்பர்களே,
                             நண்பர்களா, ஹிட்ஸா? என்று பார்க்கையில், நட்பு மட்டுமே என் நம்பிக்கை.
                               தேர்தல் பணி காரணமாக, உடனடியாக நீக்கிட இயலவில்லை. இன்று முதல் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை என் வலைப்பூவில் இருந்து நீக்கியுள்ளேன்.தகவலுக்காக.

--
மிக்க அன்புடன்,
அ.ரா.சங்கரலிங்கம்.

உணவுஉலகம்
FOOD SAFETY



ஆபீசர் எனக்கு அனுப்பிய மெயில், "நட்புக்கு மரியாதை" நன்றி ஆபீசர்.....!

---------------------------------------------------மலரும் நினைவுகள் அருவியாக------------------------------------------






http://girls-stills.blogspot.com



  • http://girls-stills.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger