Tuesday 23 August 2011

சென்னை அடையாரில�� நடக்கும் போராட்டம்








இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம்,சென்னையின் சார்பில் சென்னை, அடையாறு, எல்.பி.ரோடில் ஊழல் எதிர்ப்புப் போட்டமும்,உண்ணாவிரதமும் நடைபெற்று வருகின்றன. சனியன்றுதான் என்னால் அங்கு செல்ல முடிந்தது.உண்ணாவிரதம் என்பது எனக்கு இயலாத ஒன்று.எனவே அங்கு இரண்டு மணிநேரம் அமர்ந்தும்,என் பெயரைப் பதிவு செய்தும்,என்னால் இயன்ற ஒரு சிறு தொகையை நன்கொடையாகக் கொடுத்தும் என் ஆதரவைத் தெரிவித்தேன்.
அங்கு வந்த மக்களில் எல்லா வயதினரும் காணப்பட்டனர்.எல்லோரது முகங்களிலும் ஒரு தீவிரம் தெரிந்தது.எனக்கு மிகவும் நம்பிக்கை அளித்த விஷயம்,பங்கு கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை;அவர்கள் அங்கு செயல்படும் விதம்;அவர்கள் முகத்தில் தெரிந்த செயல் திண்ணம்.எதிர்கால இந்தியாவை சிறப்பான நிலைகளுக்கு அவர்கள் எடுத்துச் செல்வது உறுதி.
ஊழல் பெருச்சாளிகளே!எம் நாட்டின் இளைஞர்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள்! இனி அவர்களை ஏமாற்ற முடியாது!
இளைய பாரத்தினாய் வா,வா,வா!

http://snipgallery.blogspot.com




  • http://snipgallery.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger