Monday 14 October 2013

மேலும் 2 வாரம் பரோலை நீட்டிக்க நடிகர் சஞ்சய்தத் மனு Sanjay Dutt to extend the 2 week parole petition

மேலும் 2 வாரம் பரோலை நீட்டிக்க நடிகர் சஞ்சய்தத் மனு Sanjay Dutt to extend the 2 week parole petition

1993–ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் நடிகர் சஞ்சய்தத்துக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. சஞ்சய்தத் ஏற்கனவே 18 மாதம் ஜெயில் தண்டனை அனுபவித்து விட்டார்.

மீதியுள்ள 42 மாத கால ஜெயில் தண்டனையை அனுபவிக்க கடந்த மே 16–ந் தேதி சரண் அடைந்தார். முதலில் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்த அவர் பின்னர் பாதுகாப்பு கருதி புனே ஏர்வாடா மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். மருத்துவ காரணங்களுக்காக பரோலில் விடுவிக்க கோரி சஞ்சய்தத் கடந்த 1–ந் தேதி மனு செய்தார்.

இதை தொடர்ந்து அவர் 14 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டார். அவரது பரோல் இன்றுடன் முடிந்தது. இந்த நிலையில் பரோலை மேலும் 2 வாரத்திற்கு நீட்டிக்க கோரி சஞ்சய்தத் மனுதாக்கல் செய்துள்ளார். மருத்துவ காரணங்களுக்காக நீட்டிக்குமாறு அவர் கேட்டுள்ளார்.

...

shared via http://feedly.com

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger