Monday 14 April 2014

பாம்பு நடனத்துக்குள் புகுந்த நிஜ பாம்பு!


முகப்பேர் ஸ்ரீ கனக துர்கா என்ற பக்தி படம் ஒன்று தயாராகி வருகிறது. மகி, சரவணன் என்ற நியூபேஸ் ஹீரோக்களுடன் ஜான்வியும், திவ்யா நாகேசும் நடிக்கிறார்கள். ஜெயபால் சுவாமி டைரக்ட் செய்கிறார். முகப்பேரில் உள்ள கனக துர்கா கோவிலை சுற்றி கடந்த ஒரு மாதமாக ஷூட்டிங் நடந்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹீரோயின்கள் திவ்யா நாகேசும், ஜான்வியும் பாம்பு நடனமாடும் காட்சி படமாக்கப்பட்டது. டான்ஸ் மாஸ்டா சம்பத் ஹீரோயின்களை ஆட வைத்தார். "அஞ்சு தலை நாகம்மா கொஞ்சி விளையாடுதம்மா..." என்ற அந்த பாடலில் மகுடி இசை அதிகமாக இருந்தது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது கோவிலுக்குள் இருக்கும் புற்றிலிருந்து நிஜ பாம்பு ஒன்று வெளியே வர ஷூட்டிங்கை வேடிக்ககை பார்த்தவர்களும், யூனிட் ஆட்களும் அலறி அடித்து ஓடினார்கள். பின்னர் கோவில் பூசாரி வந்து பாம்பை விரட்டிய பிறகே மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger