Thursday 17 October 2013

கூடங்குளத்தில் மூன்றாம், நான்காம் அணு உலை அமைக்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம் India Russia to sign new pacts on Kudankulama reactors

கூடங்குளத்தில் மூன்றாம், நான்காம் அணு உலை அமைக்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம் India Russia to sign new pacts on Kudankulama reactors

Tamil NewsToday,

புதுடெல்லி, அக். 17-

ரஷ்யாவின் உதவியுடன் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் உலையின்  பணிகள் முடிவடைந்த நிலையில் விரைவில் உற்பத்தி தொடங்க உள்ளது. இரண்டாம் அணுஉலையின் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கூடங்குளத்தில் மூன்றாம் மற்றும் நான்காம் அணு உலைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் இந்தியாவும் ரஷ்யாவும் இறங்கியுள்ளன. அடுத்த வாரம் ரஷ்யாவில் நடைபெறும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள செல்லும் பிரதமர் மன்மோகன் சிங்கும், ரஷ்யா அதிபர் புதினும் இதுகுறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான ஒப்பந்தங்கள் நிறைவேறுவதற்கு முன்பாக அணு உலையின் சாதக பாதகங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராய இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

1988-ம் ஆண்டு இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியும், ரஷ்யப் பிரதமர் கார்ப்பசேவும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், ஜப்பான் அணு உலை விபத்தை தொடர்ந்து, கூடங்குளம் அணுஉலைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
...
Show commentsOpen link

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger