Saturday 21 September 2013

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம் coimbatore woman molested youth arrest

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது coimbatore woman molested youth arrest
Tamil News

போத்தனூர்,செப்.22-

கோவை சுகுணாபுரம் அருகே உள்ள பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மகன் சிலம்பரசன் (வயது 26), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 16-ந்தேதி அதேப்பகுதியை சேர்ந்த 27 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண், தனது பெற்றோரிடம், சிலம்பரசன் தன்னை, காட்டு பகுதிக்குள் அழைத்து சென்று, திருமணம் செய்வதாகக்கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சிலம்பரசனை பிடித்து விசாரணை செய்தனர். அதில், மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதைதொடர்ந்து அவர் மீது கற்பழிப்பு செய்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ததுடன், அவரை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சிலம்பரசன் கடந்த 2010-ம் ஆண்டில் ஒரு பெண்ணை கற்பழித்து, 5 வருடம் சிறை தண்டனை பெற்று உள்ளார்.

பின்னர் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்ததில் அவருக்கு ஜாமீன் கிடைத்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சிலம்பரசன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இதற்கிடையே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழிப்பு செய்த வழக்கில் மீண்டும் சிலம்பரசன் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
...
Show commentsOpen link

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger