Friday 11 April 2014

கால்பந்து வீரர்கள் கைது



லண்டன்: 'ஸ்பாட் பிக்சிங்கில்' ஈடுபட்ட ஏழு கால்பந்து வீரர்கள், லண்டனில் கைது செய்யப்பட்டனர்.

கிரிக்கெட்டில் போல கால்பந்து போட்டியிலும் 'மேட்ச் பிக்சிங்', 'ஸ்பாட் பிக்சிங்' போன்ற சூதாட்ட சர்ச்சைகள் இருந்து கொண்டு தான் உள்ளது. வடமேற்கு இங்கிலாந்தில் கால்பந்து லீக் கிளப்பை சேர்ந்த 6 வீரர்கள், கடந்த டிசம்பர் மாதம் 'ஸ்பாட் பிக்சிங்' தொடர்பாக கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்தனர். இதுகுறித்து 'தேசிய கிரைம் ஏஜென்சி' (என்.சி.ஏ.,) விசாரித்து வருகிறது. இதனிடையே, 18 முதல் 30 வயது வரையிலான 7 வீரர்கள் நேற்று புதியதாக கைது செய்யப்பட்டனர்.

தவிர, ஜாமினில் வெளியான வீரர்களுக்கும் தொடர்பு இருப்பது உறுதியானதால், 6 வீரர்களும் மீண்டும் கைதாகினர். மொத்தம் 13 பேர் மீது, ஊழல் மற்றும் பணமோசடி குற்றம் சுமத்தப்பட்டு, விசாரணை நடக்கிறது.


0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger