Friday 11 April 2014

டாஸ்மாக்' கடைகளில் விற்பனை அதிகமாகக் காணப்படுகிறது.



தமிழகத்தில், லோக்சபா தேர்தலையொட்டி, பணப்புழக்கம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. 'டாஸ்மாக்' கடைகளில், தினமும், 80 கோடி ரூபாய் மதிப்புக்கு மது வகைகள் விற்பனை நடப்பதன் மூலம், இது அம்பலமாகி உள்ளது.


தமிழகத்தில், சென்னை உட்பட, ஐந்து மண்டலங்களில், 6,838 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு, அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில், தினமும், சராசரியாக, 67 கோடி ரூபாய் அளவிற்கே, மதுபானங்கள் விற்பனையாகி வந்தன. தமிழகத்தில், வரும் 24ம் தேதி, லோக்சபா தேர்தல் நடக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பின், தமிழக அரசியல் களத்தில், தி.மு.க., கூட்டணி, பா.ஜ., கூட்டணி, அ.தி.மு.க., - காங்., - கம்யூ., என, ஐந்து முனை போட்டி நிலவுகிறது. இதனால், கடந்த தேர்தல்களை விட, இந்த தேர்தலில், பணப்புழக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger