Wednesday 2 October 2013

உறவினர் வீட்டுக்கு சென்ற இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த 8 பேர் கும்பல் young girl going house relatives torture 8 gang in mumbai

உறவினர் வீட்டுக்கு சென்ற இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த 8 பேர் கும்பல் young girl going house relatives torture 8 gang in mumbai
Tamil NewsToday,

மும்பை, அக். 2–

மராட்டிய மாநிலம் தேதார்கான் அணை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது இளம் பெண் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த 4 வாலிபர்கள் இளம் பெண்ணை நடுவழியில் மறித்து நிறுத்தி அருகில் உள்ள அணை பகுதிக்கு கடத்திச் சென்றனர். அங்கு 4 பேரும் மாறி மாறி கற்பழித்தனர். அவர்கள் இளம் பெண்ணுக்கு ஏற்கனவே தெரிந்தவர்கள் என்பதல் இளம் பெண்ணை ஆபாசமாக செல்போனில் படம் பிடித்தனர். நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் இன்டர்நெட்டில் பரவ விடுவதாக மிரட்டினார்கள். பின்னர் தப்பி விட்டனர்.

அதன்பிறகு இளம் பெண் தட்டுத்தடுமாறி வீட்டுக்கு நடந்து வந்த போது அந்தப் பக்கமாக 4 தொழிலாளர்கள் வந்தனர். இளம் பெண் தனியாக வருவதைப் பார்த்த அவர்களும் தூக்கிச் சென்று கற்பழித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி அதே ஊரைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். பின்னர் கற்பழிப்பில் ஈடுபட்ட 4 தொழிலாளர்களும் பிடிபட்டனர். 8 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

...
Show commentsOpen link

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger