Tuesday 22 October 2013

புற்றுநோய் சிறப்பு வார்டுக்கு ரூ.50 லட்சம் நன்கொடை கொடுத்த பிரியங்கா சோப்ரா Priyanka Chopra donated Rs 50 lakh to a special ward for cancer

புற்றுநோய் சிறப்பு வார்டுக்கு ரூ.50 லட்சம் நன்கொடை கொடுத்த பிரியங்கா சோப்ரா Priyanka Chopra donated Rs 50 lakh to a special ward for cancer

மும்பை, அக். 22-

மும்பை புறநகரில் உள்ள நானாவதி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக சிறப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பிரிவை நடிகை பிரியங்கா சோப்ரா திறந்து வைத்தார். அப்போது தந்தையின் நினைவாக, புற்றுநோய் வார்டு கட்டுவதற்கு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கினார்.

பிரியங்கா சோப்ராவின் தந்தை டாக்டர் அசோக் சோப்ரா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் இறந்தார். எனவே, புற்றுநோயாளிகளுக்கு உதவும் வகையில் இந்த தொகையை பிரியங்கா சோப்ரா வழங்கியுள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரியங்கா சோப்ரா, தன் தந்தையின் மறைவை கண்ணீர்மல்க நினைவு கூர்ந்தார். அவருக்கு நேர்ந்ததுபோல் மற்ற யாருக்கும் ஏற்படக்கூடாது என்று கூறிய பிரியங்கா, இந்த புற்றுநோய் சிறப்பு மையத்துடன் இணைந்து செயல்படுவதை பெருமையாக கருதுவதாக தெரிவித்தார்.

தேர்தலில் பிரச்சாரம் செய்தால் மக்களிடம் எப்படி வாக்கு கேட்பர்கள்? என்று நிருபர்கள் கேட்டபோது, "நான் பிரதமர் ஆனால், நாட்டில் ஊழலை அறவே ஒழிப்பேன் என்று மக்களிடம் வாக்கு கேட்பேன்" என்றார் பிரியங்கா.

...

shared via

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger