Sunday 18 March 2012

பீகார் மாநில மக்கள் பிச்சை எடுக்க வெளியில் செல்வதில்லை-நிதிஷ்

 
 
 
டெல்லியில் நேற்று நடந்த ஒரு பேரணியில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய நிதிஷ், 'எனது மாநில மக்களின் முயற்ச்சிகளை நான் பாராட்டுகிறேன். டெல்லி என்ற பெயர் அனைவருக்கும் சொந்தமானது. ஆனால், சில நேரங்களில் இங்கு கூறப்படும் நகைச்சுவை எங்களுக்கு துக்கத்தை தருகிறது' என்றார்.
 
\மேலும், 'பீகார் மாநில மக்கள் பிச்சை எடுக்க வெளியில் செல்வதில்லை. வெளியில் செல்லும் அவர்கள் கடினமாக உழைப்பார்கள். மேலும், நிலவில் ஏதாவது வேலை இருந்தாலும் பீகார் மாநில மக்கள் அங்கும் செல்லக்கூடியவர்கள். ஏனென்றால் நாங்கள் உழைப்பாளிகள். ஒரே ஒரு நாள் பீகார் மாநில மக்கள் தங்களுடைய வேலைகளை நிறுத்தினால் டெல்லியின் நிலைமை தலைகீழாக மாறிவிடும். பீகார் மாநிலத்தில் வேலைகள் இருந்தாலும் எனது மக்கள் வெளியில் தான் செல்வார்கள். இது எங்களுடைய உரிமை. இதை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம். யாரும் எங்களை தடுத்து நிறுத்த முடியாது, என்றும் நிதிஷ் கூறியுள்ளார்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger