Thursday 8 March 2012

தமிழ்நாடு நெல்லையில் இருந்து விரட்டப்பட்ட சிங்கள பேராசிரியை.

தமிழ்நாடு நெல்லை மாவட்டத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை சார்பில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி விரிவுரை நடத்துவதற்காக சென்ற சிங்கள பெண் விரிவரையாளாரின்வரவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.'போதை பழக்கமும்இ குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களும்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியை ஜீவா நீரல்லாஇ இங்கிலாந்தின் லங்காஷயர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை ஹெலன்காட் உள்ளிட்ட பெண் பேராசிரியைகள் பங்கேற்றனர்.

கொழும்பு பல்கலை பேராசிரியை ஜீவா நீரல்லாஇ இலங்கையில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கவில்லை என்றும் அவ்வாறு நடப்பதாக சித்தரிப்பது சரியல்ல என்றும் பேசியதாக கூறப்படுகிறது. இலங்கை பேராசிரியை பங்கேற்பது குறித்து ஏற்கனவே தெரிந்திருந்த நெல்லையை சேர்ந்த தமிழ்ஆர்வலர்கள்இ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் சேவியர் தலை மையில் பல்கலையின் கருத்தரங்கு அரங்கிற்குள் புகுந்தனர்.

தாங்கள் கொண்டுசென்றிருந்த பேனர்களைதூக்கி பிடித்தபடி 'இலங்கை பேராசிரியை வெளியேறு' என்ற கோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பேராசிரியை ஜீவா நீரல்லாவை உடனடியாக பாதுகாப்புடன் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger