Saturday 17 March 2012

கருப்பசாமி தாய் -தந்தையுடன் வைகோ, விஜயகாந்த் : அதிமுக டென்ஷன்

 
 
 
சங்கரன்கோவில் முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்தினருக்கு சீட் தரப்படவில்லை என்பதில் உறவினர்களிடையே வருத்தம் இருந்தது. சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்திற்கு கருப்பசாமியின் கிராமமான புளியம்பட்டிக்கு வைகோ சென்றிருந்தார்.
 
 
அப்போது அவர், கருப்பசாமியின் தந்தை சொக்கனை சந்தித்து வாழ்த்து பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
எனவே மறுதினமே கருப்பசாமியின் குடும்பத்தினரை முதல்வர் ஜெயலலிதா சென் னைக்கு வரவழைத்து சந்தித்தார்.கருப்பசாமியின் மகனுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கினார்.
 
இந்நிலையில் நேற்று புளியம்பட்டிக்கு சென்ற விஜயகாந்த், கருப்பசாமியின் தாயார் லட்சுமியை சந்தித்து நலம் விசாரித்தார். சில போட்டோக்களையும் எடுத்துக்கொண்டார்.
 
 
வைகோவை தொடர்ந்து விஜயகாந்தும் புளியம்பட்டிக்கு சென்று அளவளாவிய சம்பவம் அ.தி.மு.க.,வினரிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே தங்கள் பாட்டியை காணவில்லை என கூறி தே.மு.தி.க.,வினர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
 
 

 


0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger