Saturday 5 November 2011

ரஞ்சிதா ஆபாச வீடியோ காட்சியுடன் நித்யானந்தா படம் ரிலீசுக்கு தயார்

 
 
 
பெங்களூர் நித்யானந்தா சாமியாரும் நடிகை ரஞ்சிதாவும் படுக்கை அறையில் நெருக்கமாக இருப்பதுபோல டெலிவிஷனில் ஆபாச படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதையடுத்து நித்யானந்தாவை போலீசார் கைது செய்தனர். ரஞ்சிதா தலை மறைவானார். பல மாதங்களுக்குபின் ரஞ்சிதா திடீரென பத்திரிகையாளர்கள் முன் ஆஜராகி ஆபாச வீடியோவில் இருப்பது நான் அல்ல என மறுத்தார்.
நித்யானந்தாவும் வீடியோ போலியானது என்றார்.
 
இந்த சர்ச்சைகள் உள்ளடக்கி நித்யானந்தா வாழ்க்கையை பெங்களூரில் சினிமா படமாக எடுக்கின்றனர். அப்படத்துக்கு சத்யானந்தா என பெயரிட்டுள்ளனர். கன்னடம், தெலுங்கு மொழிகளில் இது தயாராகிறது. தமிழில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. படத்துக்கு கோர்ட்டு தடை விதிக்குமா என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
 
இப்படத்தில் ரஞ்சிதா வேடத்தில் அனுகி நடித்துள்ளார். ரஞ்சிதா இப்படத்தை எதிர்க்கவில்லை என்றும் எப்படி நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆலோசனைகள் வழங்கினார் என்றும் அனுகி கூறியுள்ளார்.
 
அவர் அளித்த பேட்டியில் ரஞ்சிதா எனக்கு நல்ல தோழியாக இருக்கிறார். சத்யானந்தா படத்தில் ரஞ்சிதா வேடத்தில் நான் நடிப்பது தெரிந்ததும் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். எப்படி நடிக்க வேண்டும் என்று எனக்கு அறிவுரை வழங்கினார் என்று தெரிவித்தார்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger