Friday 26 August 2011

தூக்கில் இருந்த�� விடுவிக்க வேண்டும்..!




26-08-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



தூக்குக் கொட்டடியில் சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நமது சகோதரர்கள் மூவரும் விடுவிக்கப்பட என்னென்ன காரணங்கள் உண்டு என்பதை பல தலைவர்களும் பேசிய காணொளிப் பேச்சுக்களை இங்கே பகிர்ந்துள்ளேன்.

இதனைக் கேட்டு இன்னும் ஆயிரக்கணக்கில் இது பற்றிய கருத்தொற்றுமையை நமது தமிழர்களிடையே நாம் பரப்புவோம்.. வாருங்கள்.. 
நமது ஒற்றுமையை காட்ட வேண்டிய தருணம் இது. கட்சி பேதமின்றி, மத பேதமின்றி, மனித நேயத்துடன் விருப்பு வெறுப்பில்லாமல் அணுக வேண்டிய விஷயம் இது..

முதலில் இந்தத் தாயின் கதறலை கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்களேன்..!





பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய குற்றமற்ற மூன்று தமிழர்க​ளை மரண தண்ட​னையிலிருந்து காக்க ​சென்னை தியாகராய நகரில் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மரணதண்டனைக்கு எதிரான பொதுக்கூட்டம் 16.08.2011 அன்று  நடைபெற்றது.


விடுத​லை ரா.ராசேந்திரன்  அவர்கள் பேசியதன் காணொளி :







 

தோழர் கொளத்தூர் மணி பேசியது







பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய குற்றமற்ற மூன்று தமிழர்க​ளை மரண தண்ட​னையிலிருந்து காக்க சென்​னை எம்.ஜி.ஆர் நகரில் ​கட்சி ​வேறுபாடுக​ளைக் கடந்து த​லைவர்கள் பங்​கேற்ற பொதுக்கூட்டம் 22.08.2011 அன்று ந​டை​பெற்றது.


 

'மண்​மொழி' இதழாசிரியர் ரா​சேந்திர​சோழன் அவர்களின் ​பேச்சு.





 

தோழர் தியாகு




 

தமிழருவி மணியன்





 

வைகோ






ஆத்தா ஜெயலலிதாவே.. உனக்கு ஒரு நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு.. நீ செத்த பின்னாடியும் உன் பேரு தமிழர்கள் மத்தில நிலைச்சு நிக்கணும்னா இவங்க மூணு பேரையும் காப்பாத்திரு..!  இல்லைன்னா அவங்க தொங்குற அதே தூக்குல, அன்னிக்கே உன்னோட பெயரும் தூக்குல தொங்கிரும்..!


 

அன்புடன்
 
உண்மைத்தமிழன்


http://actressmasaala.blogspot.com




  • http://actressmasaala.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger