Monday 16 September 2013

கர்நாடகாவில் இளம்பெண்ணை கற்பழித்து பீரோவில் பூட்டி வைத்த கொடுமை Young woman molested in Karnataka

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் தாலுகா பென்னிபுராமோளே பகுதியை சேர்ந்தவர் ரோஜா(வயது 17) (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் பி.யூ.சி. முதலாண்டு படித்து உள்ளார். இவருக்கு தாய் மட்டும் உள்ளார். தந்தை ஏற்கனவே இறந்து விட்டார்.

ரோஜா தினமும் இரவு அதே பகுதியில் உள்ள தனது சித்தி சாக்கம்மாவின் வீட்டுக்கு சென்று தூங்குவது வழக்கம். அதேபோல், நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் ரோஜா சாப்பிட்டுவிட்டு தனது சித்தி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

ரோஜாவின் சித்தி வீட்டுக்கு அருகே நாகேஷ்(26) என்பவர் வசித்து வருகிறார். அவர் கூலி தொழிலாளி. ஏற்கனவே திருமணம் ஆனவர். ரோஜா தனது சித்தி வீட்டுக்கு அருகே நடந்து வந்தபோது, அவரை நாகேஷ் வழிமறித்து சத்தம்போடவிடமால் வாயில் துணியை திணித்து தனது வீட்டுக்குள் இழுத்து சென்றார்.

பின்னர் ரோஜாவை நாகேஷ் கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதில், ரோஜா மயங்கி விழுந்தார். அவர் மயக்கம் தெளிந்து வெளியே சென்றால் பிரச்சினை ஆகி விடும் என்று கருதிய நாகேஷ், அவரை பீரோவில் வைத்து பூட்டி விட்டார்.

இந்த நிலையில், ரோஜா தனது வீட்டுக்கு வராததால் சித்தி சாக்கம்மா மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ரோஜாவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது நாகேஷ் தான் இரவில் ரோட்டில் நடமாடியதாக சிலர் தெரிவித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த ரோஜாவின் உறவினர்கள், நாகேசின் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். அப்போது பீரோவின் உள்ளே இருந்து தட்டும் சத்தம் கேட்டது. இதனால் பீரோவை திறக்கும்படி நாகேசிடம் அவர்கள் கூறினார்கள்.

ஆனால், அதற்கு மறுத்த நாகேஷ் சாவியை வெளியூருக்கு சென்று உள்ள தனது மனைவி கொண்டு சென்று விட்டதாக கூறினார். ஆனாலும், அவர்களுக்கு சந்தேகம் அதிகமானால் பீரோவின் கதவை உடைத்து பார்த்தனர்.

அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ரோஜா மிகவும் சோர்ந்து போய் இருந்தார். அவரை உடனடியாக உறவினர்கள் மீட்டு மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சாம்ராஜ்நகர் டவுன் போலீசில் ரோஜாவின் சித்தி சாக்கம்மா புகார் செய்தார். அதன்பேரில், நாகேஷ் மீது கடத்தல் மற்றும் கற்பழிப்பு பிரிவுகளின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்சார் அலி வழக்கு பதிவு செய்தார்.

பின்னர் நாகேசை பிடிக்க போலீசார் பென்னிபுராமோளேவுக்கு சென்றனர். ஆனால், அதற்குள் நாகேஷ் வீட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடையே, ரோஜாவுக்கு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

இளம்பெண்ணை மணமான ஒரு நபர் கற்பழித்ததோடு பீரோவில் வைத்து பூட்டிய சம்பவம் பென்னிபுராமோளே கிராமத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger