Wednesday 5 June 2013

லாட்ஜில் பெண் குளிப்பதை ரகசியமாக படம் எடுத்த வாலிபர்கள்

லாட்ஜில் பெண் குளிப்பதை ரகசியமாக படம் எடுத்த வாலிபர்கள்

பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 5 பேர் ஸ்ரீகாளஹஸ்தியில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர். அவர்கள் குடும்பத்துடன் அங்குள்ள சன்னதி வீதியில் ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.

நேற்று மாலை அவர்களுடன் வந்திருந்த இளம்பெண் லாட்ஜ் அறையில் உள்ள குளியல் அறையில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது 4 வாலிபர்கள் அந்த பெண் குளிப்பதை வெண்டிலேட்டர் வழியாக செல்போனில் படம் பிடித்து கொண்டு இருந்தனர். இதனை எதேச்சையாக பார்த்து விட்ட அந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். அவமானத்தில் உறைந்த அந்த பெண் உடனடியாக அதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் அந்த 4 பேரையும் பிடித்து செல்போன்களை பறித்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். ஸ்ரீகாளஹஸ்தி நகர போலீசில் புகார் செய்தனர்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமி இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து நாகராஜ் (வயது 22), ஹரிபாபு (20), சுப்பிரமணியம் (30) காம்பள்ளி கிராமம், புச்சிநாயுடு கண்டிகை, கோபால் (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர். சில நாட்களுக்கு முன்னர் இதே போல் ஒரு சம்பவம் காளஹஸ்தியில் உள்ள மற்றொரு லாட்ஜியில் நடந்துள்ளது.

புனித தலத்துக்கு வரும் பக்தர்கள் தங்கும் தனியார் விடுதியில் இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

 

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger