உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் கவிநகர் பகுதியில் வசிக்கும் பி.காம் பட்டதாரியான இளம்பெண் ஒருவர், பகுதி நேர வேலையாக உயர்நிலைப் பள்ளி -மாணவிகளுக்கு கணக்கியல் டியூஷன் கற்றுத் தந்து வருகிறார். இவரிடம் படிக்கும் பிளஸ் டூ மாணவன் ஒருவனின் நடத்தைகள் பிடிக்காததால் அவனை டியூஷனுக்கு வரவேண்டாம் என்று அந்த பெண் கூறிவிட்டார்.
நேற்று காலை, அந்த பெண் தனியாக இருப்பதை அறிந்துக்கொண்ட அந்த 18 வயது மாணவன், வீட்டிற்குள் நுழைந்து அவரை பலவந்தப்படுத்தி கற்பழித்தான்.
அவனுடன் போராடியதில் உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில், நடந்த சம்பவம் குறித்து அந்த இளம்பெண் கவிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
மருத்துவ பரிசோதனையில் அந்த பெண் கற்பழிக்கப்பட்டது உறுதியானதையடுத்து அந்த மாணவனை போலீசார் கைது செய்தனர்.
-
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?