Tuesday 20 March 2012

முத்து மாமா ...,,,

 













முந்திரி தோப்பில்
முந்தானைய இழுத்த
என் முத்து மாமா
உன் முத்து சிரிப்பில்
முற்றும் தொலைத்தேன்
என் செல்ல மாமா

உன் அக்கா மகள்
என் அன்பு உனக்குத்தான்
முத்து மாமா
நீ கள்ள தனமாய்
கண்டு ரசிப்பது ஏன்
என் தங்க மாமா

கோயில் குளம்
வேண்டி நிக்கிறேன்
என் முத்து மாமா
நீ வேண்டாதனம்
செய்ய துடிப்பதேன்
என் கண்ணு மாமா

ஜாதி சனம் முன்
உன் தாலிக்காய் தலை குனிவேன்
என் முத்துமாமா
நீ தன்னந்தனியாய்
நின்னு தவிப்பதேன்
என் சின்ன மாமா

வைகாசி மாசம்
பந்தல் போடணும்
என் முத்து மாமா
நீ வேலி அடைத்து
வெள்ளாமை தொடங்கு
என் ஆசை மாமா

ஆடி மாசம்
அம்மா கூப்பிடுவா
என் முத்து மாமா
நீ அங்கே இங்கே நின்னு முழிப்ப
என் அழகு மாமா

நம்ம பேரு விளங்க
பிள்ளைகள் வளரும்
என் முத்து மாமா
நம்ம காலம் முழுவதும்
இன்ப கதை சொல்லுவோம்
என் வீர மாமா

~அன்புடன் யசோதா காந்த் ~

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger