Wednesday 4 January 2012

நாட்டு நடப்புகள��...!!!



ஐதராபாத்: பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு பெண்களின் ஆடைகள், ஆண்களை கவர்ச்சியூட்டி கவர்ந்திழுப்பதே காரணம். இன்றைய கிராமத்து பெண்கள் நாகரீக ஆடைகளை அணிகின்றனர் என ஆந்திரமாநில டி.ஜி.பி., தினேஷ் ரெட்டி கூறியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்....!!!



[[ அப்போ நடிகைகள் போடுற டூ பீஸ் ஓகேவா கொய்யால...]]

சென்னை: ஒரு நாள் சில மணி நேரம் அடித்த தானே புயல் தாக்கத்தில் கடலூர் மாவட்டம், புது்‌ச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ‌கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடலூர் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சேதங்கள் காரணமாக பலரும் பாதிப்பில் இருந்தும் அதிர்ச்சியில் இருந்தும் இன்னும் மீள மு‌டியாமல் தவித்து வருகின்றனர். கடலூரில் 21 பேர் உயிர் இழந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் ‌தெரிவிக்கின்றன. இங்கு ‌மினசாரம் , தொலை தொடர்பு துணடிக்கப்பட்டிருப்பதால் மாவட்டம் முழுவதும் ஏற்பட்ட சேதங்கள் குறி்த்து இன்னும் முழு தகவல்கள் கிடைக்கவில்லை. புதுச்சேரியில் 8 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில்2 பேரும், சென்னையில் 3 பேரும் ஆக மொத்தம் 36 பேர் பலியாகியிருக்கின்றனர். இன்னும் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.


[[ஒன்னு மழையே பெய்யாமல் மக்களை கொல்லவேண்டியது, இல்லை மழை பேஞ்சே மக்களை கொல்லவேண்டியது, இயற்கையே பொறுமையாக இரு]]

சென்னை: தானே புயல் காரணமாக நேற்று கனமழை பெய்ததை தொடர்ந்து மணி முத்தா, கோமுகி, விடூர் அணைகள் நிரம்பியுள்ளன. இதனையடுத்து அணைக்கு வரும் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 3990 குளங்கள் நிரம்பி வழிகின்றன. இதனிடையே சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழாவரம் ஏரிகள் மூடப்பட்டுள்ளன நேற்று தானே புயல் காரணமாக புழல் ஏரி திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. செம்பரம்பாக்கம், பூண்டி, ஏரிக்கு விநாடிக்கு 1200 கன அடி வீதம் நீர் வந்து கொண்டுள்ளது, புழல் ஏரிக்கு விநாடிக்கு 650 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. தண்ணீரை தேக்கிவைக்கும் பொருட்டு ஏரிகள் மூடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 


[[நல்லதே நடக்கட்டும்]]

திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரியில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.தானே புயல் கரைகடந்து வழுவிழந்தாலும் தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் மழை பெய்து வருகிறது. மற்ற கடலோர மாவட்டங்களான கடலூர், திருவாருர், நாகை பகுதியில் மழை படிப்படியே குறைந்து வருகிறது.


[[ஹலோ ஆபீசர், குளிக்காமல் சுத்திட்டு திரியும் இம்சை அரசனையும், திவானந்தாவையும், சண்முகபாண்டியனையும், கே ஆர் விஜயனையும் பெல்டால் விளாசி குளிக்க சொல்லுங்க]]



[[எவ்வளவோ பார்த்துட்டோம், இதை பார்க்க மாட்டோமா மேடம், கஞ்சா கேஸ் உண்டா...!!!]]

முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரள முதல்வர் உம்மன்சாண்டியை மாற்ற வேண்டும் என்ற இளங்கோவன் நிலைபாட்டுக்கு, மாநில பா.ஜ., தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துள்ளார். 


[[ விடுங்கய்யா விடுங்கய்யா அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...!!!]]

இந்தியாவுடன் மோதுவது நெருப்புடன் மோதுவதற்கு சமம். நாங்கள் நெருப்புடன் விளையாட முட்டாள் அல்ல,'' என இந்தியாவுக்கான சீனா துணை தூதர் நியோ கியூங்பயோ பேசினார்.


[[பின்னே ஒரு கேப்டனை பார்த்தே பாகிஸ்தான் வாலை சுருட்டிட்டு இருக்கு, அப்புறம் சைனாவுக்கு நம்ம பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசன் அண்ணனின் ஒரு படமே போதுமானதுன்னு சைனாவுக்கு தெரியாதா என்ன...?]]

மயில்,தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டுள்ளது போல், லாலு பிரசாத் யாதவை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நபராக அறிவிக்க வேண்டும்' என, பா.ஜ., எம்.பி., சத்ருகன் சின்கா, நகைச்சுவையாக பேசினார்.


[[அவ்வ்வ்வ்வ்வ் அண்ணே இதென்ன சினிமாவா...?]]

இல்லானை இல்லானும் மதிக்காதது மாறி

உள்ளானை உள்ளான் மதிப்பது மாறி 

இல்லானை உள்ளானும் 

உள்ளானை இல்லானும் 

மதிக்க கற்றுக்கொள்வோம்...!!!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் தெரிவித்து கொள்கிறேன்...!

கடலூரில் புயல் மழையாக இருப்பதால், கரண்ட் கட் பத்துநாளைக்கு இருப்பதால் பதிவுலகம் வரமுடியாது என்பதை "நாய் நக்ஸ்"நக்கீரன் அண்ணன் பதிவுலக நண்பர்களுக்கு தெரியப்படுத்த சொன்னார்.......!!!



http://tamil-vaanam.blogspot.com



  • http://meena-tamilsexstory.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger