Friday 28 October 2011

வேலாயுதம் - FIR

 


விஜய் பற்றி எவ்வளவு நக்கல் ஜோக்ஸ் வந்தாலும் மக்களுக்கு அவர் மேல் இன்னும் நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. கில்லி மாதிரி இன்னொரு படம் வராதா என்று மக்கள் ஜாலியாக ஒரு படம் பார்க்க இன்றும் ஏங்குகிறார்கள். அந்த நம்பிக்கையை விஜய் 75% பூர்த்தி செய்திருக்கிறார்.

தங்கை செண்டிமெண்டுடன் கந்தசாமி, அந்நியன் இரண்டையும் கலந்துக்கட்டி அடித்திருக்கிறார்கள். முதல் காட்சி "பாக்கிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில்.." என்று போடும் போது பக்கத்தில் இருப்பவரிடம் "சார் இது வேலாயுதமா ? இல்லை ஏதாவது விஜயகாந்த் படமா ?" என்று கேட்க அவரும் "எனக்கும் சந்தேகமா தான் சார் இருக்கு" என்றார்.



தீவிரவாதிகளுக்கு இந்திய அரசியல்வாதியுடன் (ஹோம் மினிஸ்டர்) தொடர்பு என்ற அதே ஃபார்முலா!. விஜய் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு சென்று சண்டை போட்டால் கூட இருக்கும் கிராமத்து மக்கள், சந்தானம், தங்கை, இரண்டு ஹீரோயின், போலீஸ் என்று எல்லோரையும் அழைத்துக்கொண்டு போக முடியுமா ? செலவு என்ன ஆவது அதனால் தீவிரவாதிகள் சொந்த செலவில் (இவரை தேடி சென்னை வந்து) சூனியம் வைத்துக்கொள்கிறார்கள்.

விஜய் ஓபனிங் சீன் அருவாளுடன் வந்து ரயில் சீட் போடும் அந்த காமெடி - சூப்பர், அண்ணன் தங்கை பாசத்தை காண்பிக்க அவர் கோழி பிடிக்கும் காமெடி, பிறகு சீட்டு கம்பெனியில் போட்ட பணத்தை எடுக்க சென்னை வருவது, அவர் பணத்தை லவுட்ட சந்தானம் போடும் பிளான் என்று படம் முழு மூச்சு காமெடியாக மாறுகிறது. சும்மா சொல்லக்கூடாது ஜாலியாக போகிறபோக்கில் சந்தானம் பேசும் வசனங்கள் படத்துக்கு பலம். கடைசியில் அவர் "ஏம்பா இதை மூன்றாவது சீனிலேயே சொல்லியிருக்க கூடாதா ?" என்று அவர் விஜயிடம் கேட்பது அக்மார்க் சந்த(தா)னம் காமெடி.

பத்திரிகையாளரான ஜெனிலியா வேலாயும் கதாபாத்திரத்தை கொண்டு வர காமெடியுடன் அதிரடி சரவெடியாக மாறுகிறது படம். ஹன்சிகா முறை பெண்ணாக டினோபால் போட்ட உடம்பை அடிக்கடி காண்பிக்கிறார். இவர் கிராமத்து பெண்ணாம் :-)

சினிமா வில்லன் என்றால் என்ன செய்வார் ? பாம் வைப்பார், கள்ள நோட்டு அடிப்பார், பெண்கள் வியாபாரம் செய்வார், சீட்டு கம்பெனி நடத்தி மக்களின் பணத்தை ஏமாற்றுவார் இல்லை ரயிலை கவுப்பார். இந்த பட வில்லன் பயங்கிரம் இவை எல்லாவற்றையும் செய்கிறார்!. பாம் வைக்கும் வெளிநாட்டு தீவிரவாதி யாராக இருந்தாலும் அவர் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற நியதிப்படி இந்த படத்திலும் அவர்களேதீவிரவாதிகளாக வருகிறார்கள். அவரை சப்போர்ட் செய்ய குங்கும போட்டு இட்டுக்கொண்டு ஒரு மந்திரி வந்தால் சமய உணர்வு பாதிக்கப்படாது என்ற ஃபார்முலாவை தவறாமல் இயக்குனர் பயன்படுத்தியிருக்கிறார்.

விளையாட்டு போட்டிக்கள் நடக்கிறதோ இல்லையோ, மக்களை கூட்டி சினிமா டான்ஸ் ஆட மற்றும் படத்தில் சினிமா ஹீரோ மக்களை கூட்டி பிரசங்கம் செய்ய நேரு விளையாட்டு அரங்கம் என்று ஃபார்முலாபடி இந்த படத்திலும் கடைசியில் வருகிறது. ஏனோ முகமூடி போட்டுக்கொண்டு வரும் போது அந்நியன் ஞாபகம் வருகிறது.

சந்தானத்தின் 'குசு' வசனத்துக்கு பிறகு "உங்களால் ஓசாமா பின்லேடனை கூட காப்பாத்த முடியலை, ஆனால் கசாப்பை நாங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம்" என்று போலீஸ் பேசும் வசனம்.

மசாலா படத்துக்கு உண்டான கேமரா, இசை என்று படம் சரியான எண்டர்டெயினர். தியேட்டர் காரர்கள் நினைத்தால் இன்னும் கொஞ்சம் சரியாக படத்தை எடிட் செய்யலாம்.
கொடுத்த காசுக்கு ஏமாற்றவில்லை. குடும்பத்துடன் ஜாலியாக பார்க்கலாம், விஜய்யை கிண்டல் பண்ணலாம்.


சிக்ஸ் பேக் ஃபீவர் விஜயையும் தொற்றுக்கொண்டு விட்டது. கடைசியில் உடம்பை முறுக்கேற்றி சண்டை போடுகிறார். எதற்கு இதெல்லாம் மிஸ்டர் விஜய் ? ஆறாம் அறிவை ஆப் செய்துவிட்டு பார்க்கும் எங்களுக்கு நீங்கள் கெமிக்கல் ஃபேக்டரியை நோக்கி ஓடும் ரயிலை சடன் பிரேக் போட்டு நிறுத்தும் காட்சி ...உங்களுக்கும் ஒரு பிரேக் தான்.


இட்லிவடை மார்க் - 6/10

முதலில் "Thanks Jaya TV" என்று வருகிறது :-)

நாளை ஏழாம் அறிவு விமர்சனம்

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger