Thursday 20 October 2011

காலைக் கட்டி பந்தயத்தில் விட்டால் எப்படி ஜெயிப்பார் நேரு?- கருணாநிதி

 
 
காலைக் கட்டி விட்டு, பந்தயத்தில் ஓடச் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படித்தான் கே.என்.நேருவின் நிலை இருந்தது என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
 
திருச்சி இடைத் தேர்தல் முடிவு குறித்து இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் கருத்துக் கேட்டபோது, ஓட்டப் பந்தயத்தில் காலைக் கட்டி விட்டு ஓடச் சொன்னால் எப்படி இருக்குமோ அதே நிலையில்தான் இருந்தார் கே.என்.நேரு. பிறகு எப்படி அவரால் வெல்ல முடியும் என்றார் கருணாநிதி.
 
பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் முதல்வர் ஜெயலலிதா ஆஜரானது குறித்த கேள்விக்கு அவர் பதிலலிக்கையில், நீதிக்குத் தலை வணங்கியுள்ளார் ஜெயலலிதா. நேற்று கூட அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நேரில் ஆஜராவதைத் தவிர்க்கும் நோக்கத்தில்தான் என்றார் கருணாநிதி.
 
ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என்று கோருவீர்களா என்று கேட்டதற்கு, அவர் தான் எதற்கெடுத்தாலும் பதவியில் இருப்பவர்களை ராஜினாமா செய்யக் கோருவார் என்றார்.
 
 


0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger