Wednesday 21 August 2013

நேற்று குஜராத்தில் மூன்று முறை நிலநடுக்கம்

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் பச்சாவ் டெசில் என்னுமிடத்தில் நேற்று மாலை 6.26 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் ஸ்கேலில் 3.5 ஆகப்பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு அப்பகுதியில் உள்ள வீடுகள் லேசாக குலுங்கின. இதனால் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் ஆடியதால், மக்கள் பயந்து வீடுகளை விட்டு வெளியே பதட்டத்தில் ஓடினர்.

இந்த பூகம்பத்தின் மையம் பச்சாவிலிருந்து 11 கிலோ மீட்டர் வட கிழக்கே இருந்தது என்று பூகம்ப ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இப்பகுதியில் ரிக்டர் அளவில் 2.2 மற்றும் 2.1 ஆக பதிவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால், பொருள் சேதம், உயிர் சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வரவில்லை. கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று புஜ் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger