Sunday 7 July 2013

வேலைக்காரனுடன் ஓரினச்சேர்க்கை யில் தாத்தா எம்.எல்.ஏ

மத்திய பிரதேச மாநில நிதி அமைச்சராக
தொடர்ந்து 9 ஆண்டு காலம் பதவி வகித்தவர்
ராகவ்ஜி (79).
ஆண் பணியாளருடன் பாலியல் ரீதியாக
தவறான தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த
குற்றச்சாட்டையடுத்து மத்திய பிரதேச
நிதி மந்திரி ராகவ்ஜி தனது பதவியை கடந்த 5-
ம் தேதி ராஜினாமா செய்தார்.
தனது வீட்டில் எடுபிடி வேலை செய்து வந்த
நபருக்கு நிரந்தர
அரசு வேலை வாங்கி தருவதாக
வாக்குறுதி அளித்த ராகவ்ஜி பாலியல் ரீதியாக
தவறான தொடர்பு வைத்திருந்ததாக போலீஸ்
நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாருக்கு ஆதாரமாக அந்த
வாலிபனுடன் நிதி மந்திரி ராகவ்ஜி மற்றும்
அவருடைய உதவியாளர்கள் இருவர் தவறான
முறையில் நடந்துக் கொள்ளும் சி.டி.
பதிவுகளும் அளிக்கப்பட்டன.
இதனையடுத்து, நிதி மந்திரி பதவியில்
இருந்து ராகவ்ஜி மீது போலீசில்
வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக தன்
மீது தனது அரசியல் எதிரிகள் வேண்டாத
பழியை சுமத்துவதாக ராகவ்ஜி கூறி வந்தார்
இந்நிலையில், பா.ஜ.க.வின்
அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சியின்
அனைத்து பதவிகளில் இருந்தும்
ராகவ்ஜியை நீக்கம் செய்து மத்திய பிரதேச
மாநில பா.ஜ.க. தலைவர் நரேந்திர சிங் டோமர்
இன்று அறிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger