Friday 10 February 2012

சந்திரபாபு நாயுடு நாக்கை அறுப்பேன்: சந்திரசேகரராவ் மிரட்டல்

 
 
 
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு 2 நாட்களுக்கு முன்பு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திர சேகரராவ் மீது பல்வேறு ஊழல் புகார்களை கூறினார். மேலும் அவர் கூறும் போது, ஆந்திராவில் போலவரம் நீர்த்தேக்கம் கட்டும் பணியை சந்திரசேகரராவிடம் மாநில அரசு ஒப்படைத்துள்ளது. இதனால்தான் அவர் தனித் தெலுங்கானா போராட்டத்தை கைவிட்டு விட்டார்.
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சந்திரசேகரராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
சந்திரபாபு நாயுடுவை ஊழலில் பிறப்பிடம் என்றே சொல்லலாம். அவரது ஆட்சியில்தான் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகமாக நடந்தது. இதனால்தான் ஆந்திர மக்கள் அவரது ஆட்சியை தூக்கி எறிந்தார்கள். போலவரம் நீர்த்தேக்கம் கட்டும் பணியை ஆந்திர அரசு என்னிடம் ஒப்படைத்திருப்பதாக சந்திரபாபு நாயுடு பொய்யான தகவலை கூறி வருகிறார்.
 
என் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தால் சந்திரபாபு நாயுடுவின் நாக்கை அறுப்பேன். அவரது பேச்சு எல்லை மீறி விட்டது. அவரை தெலுங்கானா மக்கள் சும்மாவிட மாட்டார்கள். சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில்தான் விவசாயிகள் தற்கொலை அதிகரித்தது. விவசாயிகளுக்கு அவர் எந்தவித உதவிகளும் வழங்க வில்லை.
 
இவ்வாறு அவர் கூறினார்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger