Friday 10 February 2012

மாணவனின் கொலைவெறி

 

அமெரிக்காவில் அடிக்கடி நடக்கும் "வகுப்பறையில் இந்திய மாணவன் சுட்டு கொலை" "பள்ளியில் ஆசிரியர் சுட்டு கொலை" பொன்ற செய்தி நேற்று சென்னையில் நடந்திருக்கிறது. பள்ளிக்கு பெற்றோர்கள் வந்து தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு போகும் முன் மீடியா உள்ளே நுழைந்து இதை மேலும் பரபரப்பாக்கிவிட்டார்கள். எல்லா ஆங்கில சேனல்களிலும் பிளாஷ் நியூஸ் என்று அமர்க்களப்படுத்துவிட்டார்கள். நேற்று பள்ளியில் நுழைந்த பெற்றோர்கள், மீடியா தான் இந்த கொலைக்கே காரணம் என்று சொல்லுவேன்.

ஒரு வாரமாக டிவியில் வரும் 'செங்காத்து பூமியிலே' என்ற படத்தின் ட்ரைலரை பார்த்திருப்பீர்கள், அவ்வளவு ரத்தம் அந்த ட்ரைலரில். இந்த மாதிரி படங்களை பார்த்து வளரும் குழந்தைகள் தங்களுக்கு கட்டுக்கடங்காத கோபம் வரும் போது, வீட்டில் இருப்பதை தூக்கி எறிவதற்கு பதில் சமையல் அறையில் இருக்கும் கத்தியை எடுப்பார்கள். முன்பு தாத்தா பாட்டி இருந்த இரவு நேரங்களில் பேரன் பேத்திகளுக்கு கதை சொல்லுவார்கள். ஆனால் தற்போது அவர்களுக்கு இரண்டு பொண்டாட்டி கதை சீரியல் பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. சீரியலை மிஸ் செய்துவிட்டால் அடுத்த நாள் மத்தியானம் நினைவு வைத்துக்கொண்டு பார்க்கிறார்கள். சின்ன பாட்டிகள் யூ டியூபில் பார்த்துக்கொள்கிறார்கள். இவர்கள் இப்படி இருந்தால் குழந்தைகள் எப்படி உருப்படும்?

பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பதில் தவறு இல்லை. ஆனால் ஆசிரியர்கள், இண்டர்னலில் கை வைத்துவிடுவேன், பிராக்டிகளில் கம்மி செய்துவிடுவேன் என்று மாணவர்களை பயப்பட செய்வது அவர்களுக்கு மன அழுத்ததையும் மனநிலை பாதிப்பையும் கொடுக்கும். சமீபத்திய சினிமா படங்களில் அழுக்காகவும் தாடி வைத்துக்கொண்டு பெண்கள் பின்னால் சுற்றும் பொறுக்கிக்களாகவும் ஹீரோக்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். வீட்டிலிருந்து திருடும் பணத்தை கொண்டு குடித்து கும்மாளம் போடும் பொறுக்கிக்கள். இவர்களை பாக்கும் மாணவர்கள் என்ன நினைப்பார்கள் ?

இந்த மாணவன் கடைசியாக பார்த்த `அக்னிபத்` என்ற இந்தி படத்தில் வரும் காட்சிகள் கொலைக்கு தூண்டுதலாக இருந்துள்ளது என்று போலீஸில் தெரிவித்துள்ளான். நாம் பார்க்கும் சீரியல்களில் தினமும் விஷம் வைத்து கொலை செய்யும் காட்சி ஏதாவது ஒரு சீரியலில் வந்துவிடுகிறது. அவர்கள் பேசும் வசனங்கள் நல்ல ஒழுக்கமாக குடும்பத்தில் யாரும் பார்க்க, கேட்க மாட்டார்கள். நம்முடன் சீரியல் பார்க்கும் நம் குழந்தைகள் கொஞ்ச நாளில் அதே மாதிரி முகபாவம், வார்த்தைகள், வசனங்களை பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

மாணவர்கள் தங்கள் வாழ்கைக்கு 99 மார்க் பின்னாடி ஓடுவதை காட்டிலும், ஒழுக்கம் மிகவும் முக்கியம் என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும் உபதேசிக்க வேண்டும். பெற்றோர்கள் ட்விட்டரிலும், பிளாகிலும் செலவு செய்யும் நேரத்தை தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்ய வேண்டும். முதல் காரியமாக வீட்டில் சீரியல் பார்ப்பதை நிறுத்தினால் நல்ல சமுதாயம் உருவாகும்.

திருட்டு விசிடி என்றாலும் பரவாயில்லை. "I am Kalam" போன்ற படங்களை உங்கள் குழந்தைகளுக்கு போட்டு காண்பியுங்கள்.

நிச்சயம் 15 வயது மாணவன் தப்பு செய்ய மாட்டான், இந்த கொலைக்கு அவன் காரணம் இல்லை. நல்ல வேளை அது என் குழந்தை இல்லை என்று மற்ற பெற்றோர்கள் ஆறுதல் அடையலாம். இது தற்காலிகமான ஆறுதல் தான்.

படம்: செங்காத்து பூமியிலே என்ற படத்தின் ஸ்டில்! இது வீரம் இல்லை ரவுடித்தனம்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger