Saturday 16 November 2013

Dony Blair in Elam ராஜபக்சேவின் வயிற்றில் புளியைக் கரைத்த நாள்

created by tamil blogs

தமிழகத்தில் ஈழம் பற்றி பேசுபவர்கள் , பேஸ்புக் போராளிகள் எந்த அளவுக்கு யதார்த்தம் குறித்த புரிதல் உள்ளவர்கள் என்பது குறித்து எனக்கு பெருத்த ஐயம் உண்டு . தமிழ்நாட்டில் முட்டுசந்தில் நின்று மூன்று பேர் கத்துவது போன்ற உப்புக்கு பெறாத நிகழ்வுகளையெல்லாம் ராஜபக்சே பயந்து விடுவது போல மாய்ந்து மாய்ந்து பேசுவார்கள் . எனக்குத் தெரிந்து முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு ராஜபக்சேவின் வயிற்றில் புளியைக் கரைத்த நாள் இன்றாகத் தான் இருக்கும் .

இங்கிலாந்து பிரதமர் யாழ்ப்பாண வீதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார் . இது எவ்வளவு பெரிய நிகழ்வு ! சர்வதேச அளவில் ஏதாவது அழுத்தம் கிடைத்து ஈழத்தமிழர்களுக்கு நல்லது நடக்க வேண்டுமென்றால் அதன் தொடக்கமாக இது அமைவதற்கு வாய்ப்பு அதிகம் .நம்பிக்கை துளிர்க்கிறது . நல்லதே நடக்கட்டும்

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger