Friday 1 November 2013

பணவீக்கம் தொடர்ந்து சவாலாக இருக்கிறது: ப.சிதம்பரம் Inflated continues challenge pa Chidambaram

பணவீக்கம் தொடர்ந்து சவாலாக இருக்கிறது: ப.சிதம்பரம் Inflated continues challenge pa Chidambaram

புதுடெல்லி, நவ. 1-

மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது பண வீக்கம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக் குறை தொடர்வாக அவர் கூறியதாவது:-

நடப்பு கணக்கு பற்றாக்குறையைப் பொருத்தவரையில் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை இந்த ஆண்டு 60 பில்லியன் டாலராக இருக்கும். கடந்த ஆண்டு இது 88 பில்லியன் டாலராக இருந்தது.

பணவீக்கம் தொடர்ந்து சவாலாகவே இருந்து வருகிறது. ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வரும் நடவடிக்கை காரணமாக, பணவீக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நடப்பு ஆண்டு ஏற்றுமதி வளர்ச்சிப்பாதையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

...

shared via

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger