விஜய்யின் ‘தலைவா’ படம் சென்ஸார் சிக்கல்,
வரிச்சலுகை சிக்கல் என இரண்டு பெரிய
சிக்கல்களிலும்
மாட்டிக்கொண்டதற்கு அடிப்படை காரணமே அது முழு அரசியல்
படமாக இருந்தது தான்.
மேலும் படத்தில் இடம்பெற்றிருந்த அரசியல்
காட்சிகளும், அதிரடியான பஞ்ச்
டயலாக்குகளுமே ரிலீஸ் சிக்கலுக்கான
உண்மையான காரணம் என தெரிய
வந்துள்ளது.
அரசியல் ரீதியான பிரச்சனைகள்
தலைவா படத்தை நெருக்கியதால்
திட்டமிட்டபடி தலைவா படம்
இன்று தமிழ்நாட்டில் ரிலீஸாகவில்லை.
ஆனால் மற்ற மாநிலங்களிலும்,
வெளிநாடுகளிலும் படம் ரிலீஸாகி விட்டது.
இதற்கிடையே தமிழகத்தில் ‘தலைவா’
படத்தின் ரிலீஸ் சிக்கலுக்கு அதில்
இடம்பெற்றுள்ள ‘5’ அரசியல் பஞ்ச்
டயலாக்குகள் தான் முக்கிய காரணங்களாக
சொல்லப்படுகிறது.
ஏற்கனவே “உங்க ‘அம்மா’வை பாருடா,
அப்புறமா மத்த ‘அம்மா’வ பாக்கலாம்…”,
“எல்லாருக்கும் ஒட்டு போட்டீங்க,
எனக்கு ஒட்டு போடுங்க, நான்
நல்லது செய்யுறேன்…”
ஆகிய 2 பஞ்ச் டயலாக்குகளுடன் படத்தில்
இன்னும் கூடுதலாக இருக்கும் 3
டயலாக்குகளுக்கும் கத்தரி போட
கட்டளை வந்திருக்கிறதாம்.
அதாவது படத்தின் ஒரு பாடல் காட்சியில்
“உன்னை மாதிரி ஆடிக்கிட்டுருந்தவங்க தான்
முதலமைச்சரா வந்திருக்காங்க.., நீயும்
நல்லா டான்ஸ் ஆடுற, அதனாலே நீயும்
முதலமைச்சரா ஆயிடுவே…” என்று சந்தானம்
ஒரு டயலாக் பேசுகிறாராம்.
படத்தில் உள்ள மற்றொரு காட்சியில்
“அண்ணா …
உங்களை மாதிரி நேர்மையா இருக்கிறவங்க
தான் ஆட்சிக்கு வரணும்…”, “இலவசம்
இலவசம்னு நாட்டை குட்டிச்சுவராக்கிட்டிருக்காங்க…”
என்று சத்யராஜ் இரண்டு டயலாக்குகள்
பேசுகிறாராம்.
மேற்படி ஆளும் அரசுக்கு எதிரான இந்த ‘5’
அரசியல் பஞ்ச் டயலாக்குகளுக்கும்
கத்தரி போட்டால் மட்டுமே அரசின்
வரிச்சலுகையும் கிடைக்கும், படமும்
ரிலீஸாகும் என்று அரசின் சார்பில்
திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
மேலும் தற்போது கொடநாட்டில் இருக்கும்
தமிழக முதல்வர் வருகிற 12- ஆம் தேதி தான்
சென்னை திரும்புகிறாராம்.
அதன்பின்னரே விஜய்
அன்கோ முதல்வரை சந்திக்க முடியும்.
அப்படி சந்திக்கும் பட்சத்தில் அனேகமாக படம்
வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர
தினத்தன்று ரிலீஸாகும் என்று நம்பகமான
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
[Continue reading...]