Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Thursday, 1 August 2013

ரோஷினி மீது ஒருதலை காதல்

- 0 comments

ஒருதலை காதலில் கல்லூரி மாணவியை கோடாரியால் வெட்டிய டெல்லி மாணவன் விஷம் குடித்து தற்கொலை

புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைக் கழகத்தில் படிக்கும் ஆகாஷ்(23) என்ற மாணவர் ரோஷினி(22) என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். 

அவரது காதலை ரோஷினி ஏற்றுக்கொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த ஆகாஷ் நேற்று காலை 11 மணியளவில் ரோஷினியை வெறித் தனமாக கோடாரியால் வெட்டினார்.

படுகாயமடைந்த ரோஷினி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதை கண்ட ஆகாஷ் விஷத்தை குடித்துவிட்டு கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார்.

இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் ஆகாஷிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, கோடாரி, கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ரோஷினியையும் ஆகாஷையும் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி ஆகாஷ் உயிரிழந்தார். ரோஷினியின் உடல்நிலை தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
[Continue reading...]

Wednesday, 17 July 2013

மிஸ்டுகாலில் தொடங்கி மரணத்தில் முடிந்த இளவரசனின் காதல் கதை

- 0 comments
சில ஆண்டுகளுக்கு முன்பு

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை அடுத்த நத்தம் காலனியை சேர்ந்தவர் இளவரசன் இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

இளவரசனின் செல்போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்தது. தொடர்ச்சியாக 4, 5 நாட்கள் தொடர்ந்து அஎதே மிஸ்டுகால் . இதையடுத்து இளவசரன் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய ஒரு பெண் தனது பெயர் திவ்யா என்று அறிமுகப்படுத்தி கொண்டார். இதையடுத்து அவர்கள் அடிக்கடி போனில் பேசி கொண்டனர். போனில் பேசி பழக்கம் ஏற்பட. ஒரு நாள் ஜூஸ் கடையில் வைத்து அவர்கள் சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பு அவர்களிடையே காதலை வளர்த்தது.
[Continue reading...]

Tuesday, 16 July 2013

எங்கள் உயிருக்கு ஆபத்து : கலப்பு காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சம்

- 0 comments
தர்மபுரி மாவட்டத்தில் இளவரசன் என்ற கல்லூரி மாணவரும், திவ்யா என்ற நர்சிங் கல்லூரி மாணவியும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பாக கலவரம் வெடித்தது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இதே போல் ஒரு காதல் கலப்பு திருமண ஜோடி நேற்று தஞ்சை வந்தனர். காதல் கலப்பு திருமணம் செய்த கொண்ட ஜோடியின் பெயர் செந்தமிழ்ச்செல்வி (வயது 19) விமல்ராஜ் (27). இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் ஆகும்.
காதல் திருமண ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜனிடம் ஒரு மனு கொடுத்தனர். பின்னர் செந்தமிழ்ச்செல்வி நிருபர்களிடம் கூறியதாவது:–
எனது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள மணக்கரை கிராமம் ஆகும். எனது தந்தை பெயர் செல்வராஜ். நான் கும்பகோணத்தில் உள்ள அரசு
[Continue reading...]

Wednesday, 10 July 2013

திவ்யா மற்றும் அவரது தாயாருக்கு கவுன்சிலிங் - ஐகோர்ட்டு உத்தரவு

- 0 comments
தர்மபுரியில் காதல் கலப்பு திருமணம் செய்த இளவரசன் மரணத்தையடுத்து திவ்யா மற்றும் அவரது தாயாருக்கு கவுன்சிலிங் வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  உத்தரவு
திவ்யா மற்றும் அவரது தாயார், சகோதரருக்கு டாக்டர். ரவிசங்கர் தலைமையில் மருத்துவக் குழு, 10 அமர்வுகளில் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் ஆலோசனை வழங்க வேண்டும். இது குறித்து அறிக்கையை 24–ந்தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.
இளவரசனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதி கேட்டு அவரது நெருங்கிய உறவினர்களும், திவ்யா தரப்பிலும் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கலாம். அங்குள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்த ஊர்வலத்தில் எத்தனை பேர் கலந்து கொள்ளவேண்டும்? என்பதை குறிப்பிட்டு தகுந்த முடிவுகளை கலெக்டர் எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு கூறியிருந்தது.
[Continue reading...]

Monday, 8 July 2013

இளவரசன் – திவ்யா காதல் , கடைசி காதல் கடிதம்

- 4 comments
இளவரசன் தனக்கு கடைசியாக எழுதிய காதல் கடிதத்தை பார்த்து திவ்யா கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றியதாக கூறப்படுகிறது. 
இளவரசன்–திவ்யா காதல் தமிழகத்தில் யாரும் மறக்க முடியாத சுவடுகளாக பதிவாகி விட்டது. கலப்பு திருமணம் செய்ததால் ஏற்பட்ட மோதல், வன்முறை என சினிமாவை போல் நீண்டு கொண்டே சென்ற இவர்களின் காதல் இளவரசனின் மரணத்தால் முடிவுக்கு வந்து விட்டது.
காதல் மனைவியை பிரிந்த துக்கத்தில் இருந்த இளவரசன் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென இறந்து விட்டது பல காதல் ஜோடிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இறந்து கிடந்த இளவரசன் தனது மனைவி திவ்யா, பெற்றோருக்கு தனிதனியாக கடிதம் எழுதி உள்ளார். அதில் திவ்யாவை அவர் எந்த அளவுக்கு நேசித்து உள்ளார் என்று விவரித்து உள்ளார். இந்த கடிதம் இளவரசனின் பெற்றோரிடம் போலீசார் படிக்க கொடுத்தனர். இதே போல் அந்த கடிதத்தை போலீசார் திவ்யாவிடமும் படிக்க கொடுக்க முடிவு செய்து இருக்கிறார்கள்.
இளவரசனின் கடைசி காதல் கடிதம் பற்றி பத்திரிகை மற்றும் டி.விக்களில் செய்தி வெளியிடப்பட்டு வருவதை பார்த்த திவ்யா கண்ணீர் விட்டு கதறி அழுததாக கூறப்படுகிறது. தனக்காக தன் உயிரையும் விட்ட இளவரசனை நினைத்து திவ்யா மிகுந்த சோகத்தில் உள்ளார்.
[Continue reading...]

காதலியுடன் ஓடிய வாலிபர் மர்ம சாவு

- 0 comments
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கோடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணா (22). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரிக்கும் காதல் ஏற்பட்டது. ராஜேஸ்வரிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இருந்த போதிலும் அவள் ராமகிருஷ்ணனை தீவிரமாக காதலித்து வந்தார்.
இவர்களது காதல் விவகாரம் உறவினர்களுக்கு தெரியவந்த நிலையில் காதல் ஜோடியினர் கடந்த மாதம் 28–ந்தேதி ஊரை விட்டு ஓடியது. இது குறித்து ராஜேஸ்வரி உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் காதல் ஜோடியினர் சேலத்தில் இருப்பது தெரியவந்தது. அவர்களை அழைத்து வருவதாக சென்ற போலீசார் ராஜேஸ்வரியை மட்டும் மீட்டு கொண்டு வந்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். காதலன் ராமகிருஷ்ணா பற்றி எந்த தகவலும் தெரிவிக்க வில்லை.

[Continue reading...]

Saturday, 6 July 2013

இளவரசனின் மரணச் செய்தி திவ்யா கண்ணீர் விட்டு கதறி அழுதார்

- 0 comments
இளவரசனின் மரணச் செய்தி அறிந்ததும் திவ்யா அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
திவ்யாவின் தாய் தேன்மொழி கூறியதாவது:–
எனது மகள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியால் உடைந்து போய் இருக்கிறாள். எதுவும் சாப்பிட மறுக்கிறாள். முதலில் தந்தையை இழந்தாள். இப்போது இளவரசனின் சாவு செய்தியும் அவளை மிகுந்த மனஅழுத்தத்தில் தள்ளி உள்ளது. அதில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் நாங்களும் தவிக்கிறோம்.
[Continue reading...]

Thursday, 4 July 2013

இளவரசன் எழுதிய காதல் கடிதம்

- 0 comments
பெண்களே உது உங்களுக்கு தேவைதானா ?    

ஆவதும்  பெண்ணாலே மனுஷன் அழிவதும் பெண்ணாலே


 இளவரசனுக்கு இது சரியான தண்டனைதான் - தமிழ்நாட்டில் பெண்களை பெற்ற  பெற்றோர்களின் மனநிலை

இதுவாக இருக்கும் பொது  அவரின் காதல் கடிதம் இதோ உங்களுக்காக ...



இந்த கடிதம் ஒன்றில் இளவரசன் கூறி இருப்பதாவது:-
[Continue reading...]

Wednesday, 3 July 2013

மற்ற வாலிபர்களுடன் பேசுவது எனக்கு பிடிக்க வில்லை , பண்ணை வீட்டில் இளம் பெண்ணை கொன்ற காதலன்

- 0 comments
 மற்ற வாலிபர்களுடன் பேசுவது எனக்கு பிடிக்க வில்லை 


கேளம்பாக்கத்தை அடுத்த வெளிச்சை கிராமத்தில் சென்னை தியாகராய நகரை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவருக்கு சொந்தமான சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு உள்ளது. இங்கு ஏராளமான மரம், செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பண்ணை வீட்டின் காவலுக்காக 15 நாய்கள் அங்கு வளர்க்கப்பட்டு வருகின்றது.

இந்த பண்ணை வீட்டில் ராமையா என்பவர் தங்கி இருந்து தோட்டப் பணிகளையும் கவனித்துக் கொண்டு அருகில் உள்ள நாவலூர் தனியார் நிறுவனம் ஒன்றிலும் வேலை செய்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் போச்சம் பள்ளியை சேர்ந்த இவர், தனக்கு துணையாக மகள் செல்வநாயகியையும் தன்னுடனேயே தங்க வைத்திருந்தார்.
[Continue reading...]

Monday, 1 July 2013

தருமபுரி காதல் திருமணம் , காதலி பேட்டி

- 0 comments
காதல் திருமணத்தை தாயார்
ஏற்றுக்கொண்டால், கணவருடன்
வாழ்வது பற்றி முடிவு செய்வேன்
என்று ஐகோர்ட்டு நீதிபதிகளிடம்
தர்மபுரி பெண் வாக்குமூலம் அளித்தார்.
சென்னை ஐகோர்ட்டில் தர்மபுரி மாவட்டம்,
மாரவாடியைச் சேர்ந்த தேன்மொழி (வயது 44)
தாக்கல் செய்த
ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல்
செய்திருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது மகள் திவ்யாவும் (வயது 20), மகன்
மணிசேகரும் கல்லூரி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திவ்யா கடத்தப்பட்டு,
இளவரசன் (வயது 19) என்பவருடன்
சட்டவிரோதமாக திருமணம் செய்ததைத்
தொடர்ந்து எனது கணவர் நாகராஜ் கடந்த
நவம்பர் 7-ந்
தேதி தற்கொலை செய்துகொண்டார்.
இந்த நிலையில் திவ்யா தொடர்பு கொண்டு,
இளவரசன் தன்னை மிரட்டுவதாகவும்,
வாழ்வுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும்
தெரிவித்தார். எனது மகள்
திவ்யாவை சட்டவிரோதமாக
அடைத்திருப்பதாக கருதுகிறேன்.
[Continue reading...]

Wednesday, 26 June 2013

கவிதாவின் கள்ளகாதல் - Tritchi kavitha

- 0 comments
 கவிதாவின் கள்ளகாதல்

கள்ளக்காதலனை திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த சித்திரைப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கவிதா, 30. இவர்களுக்கு, 12 வயதில் பெண் குழந்தையும், எட்டு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். கவிதாவின் நடத்தை சரியில்லாத காரணத்தால், கணவர் சரவணன் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
அதே காரணத்துக்காக, கவிதாவின், இரு குழந்தைகளையும், அவரது தாயார் அழைத்துச் சென்று வளர்த்து வருகிறார். குழந்தைகளைப் பற்றி கவலைப்படாத கவிதாவுக்கு, திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியைச் சேர்ந்த யோகநாதன், 25, என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் தாலிகட்டாமல் குடும்பம் நடத்த துவங்கினர். கடந்த, இரண்டு ஆண்டாக துறையூர், கரூர் ஆகிய இடங்களில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.
[Continue reading...]

Thursday, 14 February 2013

இந்த காதல் கடிதம் படியுங்க..

- 0 comments
காதலில் வெற்றி பெற, திருமணத்தில் தடையுள்ளவர்கள், இந்த கடிதத்தைப் படித்தால் சிறந்த வாழ்க்கைத்துணை அமையும் என்பது நம்பிக்கை. விதர்ப்பதேசத்தின் ராஜா பீஷ்மகரின் மகள் ருக்மிணி. இவள் கிருஷ்ணரைக் காதலித்தாள். ஆனால், ருக்மிணியின் அண்ணன் ருக்மியோ அவளை சேதி நாட்டு இளவரசன் சிசுபாலன் என்பவனுக்கு திருமணம் செய்ய நிச்சயித்தான். இதை விரும்பாத ருக்மணி, கிருஷ்ணரைத் திருமணம் செய்யும் விருப்பத்தை ஏழு ஸ்லோகங்களாக எழுதி அனுப்பினாள். அவை..

கண்ணபிரானே! தங்களுடைய தகுதியான குணங்களையும், உன்னதமான அழகையும் பற்றி கேள்விப்பட்டு என் மனம் உங்கள் வசம் முழுவதுமாக வந்துவிட்டது.

தங்கள் ஒழுக்கம், குணம், வடிவம், கல்வி, இளமை,தைரியம், தர்மசிந்தனை ஆகியவை யாவும் என்னிடமும் இருப்பதாக நினைக்கிறேன்.

என் ஆத்மாவை, சிங்கம் போன்ற வீரமிக்க உங்களுக்கு என்னை அர்ப்பணித்து விட்டேன்.

உங்களைக் கணவராக அடைவதற்கு, பல ஜென்மங்களாக விரதங்கள், ஹோமங்கள் உள்ளிட்ட சடங்குகளை சரியான முறையில் நிறைவேற்றியிருப்பதாகக் கருதுகிறேன். என்னைத் தாங்களே கைபிடிக்க வேண்டும்.

எனக்கு விருப்பமில்லாத திருமணம் நடப்பதற்கு முதல்நாளே இங்கு வந்து, எதிரிகளைத் தோற்கடித்து, துவாரகைக்கு தூக்கிச் சென்று, விதிகளின்படி திருமணம் செய்ய வேண்டுகிறேன்.

எங்கள் குலவழக்கப்படி, திருமணத்திற்கு முன்தினம் அம்பிகை கோயிலுக்குச் செல்வேன். பூஜை முடிந்து வெளியே வந்ததும் என்னைக் அழைத்துச் செல்லலாம். யோகிகளாலும் மகான்களாலும் பூஜிக்கப்படும் தங்கள் திருவடிகளை, தினமும் பூஜிக்கும் பாக்கியம் வேண்டும்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger