சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்
போதுமான மழை பெய்யாததால் தண்ணீர்
பிரச்சினை தலை தூக்கி உள்ளது.
சென்னையை பொறுத்த வரை நிலத்தின்
விலை தங்கத்தை போல் நாளுக்கு நாள்
உயர்ந்து கொண்டே போகிறது இட
பிரச்சினை மற்றும் விலை உயர்வு காரணமாக
பிளாட் வீடுகள் அதிகமாகி உள்ளன.
அரை கிரவுண்டு இடம் இருந்தால் அதிலும் 4
வீடுகளை கட்டி விடுகிறார்கள் தண்ணீர்
தேவைக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில்
ஏராளமான ஆழ்துளை கிணறுகள்
போடப்படுகிறது.
சென்னையில் ஆழ்துளை கிணறுகளின்
எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேல்
இருப்பதாகக் கூறப்படுகிறது. இவற்றின்
மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது.
ஆனால் அதற்கு ஏற்ப பூமிக்கு அடியில்
தண்ணீர் செல்ல வழியில்லை. நில பரப்புகள்
கான்கிரீட் தளங்களாக
மாறி வருவதே இதற்கு காரணம்
இப்போது மழையும் எதிர் பார்த்த
அளவு பெய்யாததால் பல இடங்களில்
நிலத்தடி நீர் வறண்டு விட்டது.
மடிப்பாக்கம், கீழ் கட்டளை பகுதியில்
ஆள்துளை கிணறுகள் வறண்டு விட்டதால்
வீட்டு உபயோகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல்
தவிக்கிறார்கள். குடி நீருக்கு தினமும் ரூ.35
விலையில் கேன் தண்ணீர்
வாங்கி வருகிறார்கள். வீட்டு தேவைக்காக பல
அடுக்கு மாடி குடியிருப்புகளில் லாரிகளில்
தண்ணீர் வாங்குகிறார்கள்.
குடியிருப்பவர்களிடம் ஒவ்வொரு வீட்டிலும்
உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தண்ணீர்
கட்டணம் வாங்கப்படுகிறது. 2 ஆயிரம் லிட்டர்
தண்ணீர் ரூ.600–க்கு வாங்கி டேங்குகளில்
நிரப்பி வீடுகளுக்கு சப்ளை செய்கிறார்கள்.
இதற்கு ஒரு நபருக்கு ரூ.40 முதல் 50
வரை செலுத்த வேண்டி உள்ளது.
ஏற்கனவே வீட்டு வாடகை ரூ.7 ஆயிரம்
அல்லது 8 ஆயிரம் செலுத்தும் நிலையில்
தண்ணீருக்காகவும் மாதம் குறைந்த பட்சம்
ரூ.4000 ஆயிரம் முதல் 5 ஆயிரம்
வரை செலவு செய்ய வேண்டி உள்ளது.
இதனால் நடுத்தர குடும்பத்தினர் கடுமையான
நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். ஒரு சிலர்
வீடுகளை காலி செய்து தண்ணீர் கிடைக்கும்
பகுதிகளுக்கு செல்கிறார்கள். குழந்தைகள்
பள்ளிக்கு செல்லும் வசதி மற்றும்
அலுவலகங்களுக்கு செல்லும்
வசதிகளை நினைத்து வேறு வழியில்லாமல்
தண்ணீருக்காக கண்ணீர் விட்ட
படி ஒவ்வொரு நாளையும்
கடத்தி கொண்டிருக்கிறார்கள். வருண பகவான்
கண் திறந்தால் தான் இவர்களின்
கண்ணீருக்கு தீர்வு கிடைக்கும்.
-
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?