Home » Archives for 12/18/13
Wednesday, 18 December 2013
தொழிலதிபர் மீதான வழக்கை வாபஸ் பெற்றார்: நடிகை ராதா திடீர் பல்டி Actress Radha lawsuit withdrawn against businessman
Actress Radha lawsuit withdrawn against businessman தொழிலதிபர் மீதான வழக்கை வாபஸ் பெற்றார்: நடிகை ராதா திடீர் பல்டி Actress Radha lawsuit withdrawn against businessman
சுந்தரா டிராவல்ஸ் உள்பட ஏராளமான தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ராதா. இவர் சென்னை சாலி கிராமத்தில் வசித்து வருகிறார். சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த தொழிலதிபர் பைசூல் மீது நடிகை ராதா பரபரப்பு புகார் மனு கொடுத்தார்.
தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி தொழிலதிபர் பைசூல் 6 ஆண்டுகள் தன்னோடு குடும்பம் நடத்தியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், ரூ.50 லட்சம் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்து விட்டதாகவும் புகார் மனுவில் நடிகை ராதா குறிப்பிட்டிருந்தார்.
அவரது புகார் மனு மீது வடபழனி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க தொழிலதிபர் பைசூல் 3 முறை முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். 3 முறையும் அவரது முன்ஜாமீன் மனுக்களை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.
இந்த நிலையில் நடிகை ராதா தொழிலதிபர் பைசூலை கைது செய்ய வேண்டுமென்றும், அவரை சிறைக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என்றும் சவால் விட்டு பேட்டி கொடுத்து வந்தார்.
போலீஸ் அதிகாரிகள் மீதும் குறை கூறினார். பைசூலை கண்டிப்பாக கைது செய்ய வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்துக்கும் வந்து நடிகை ராதா முறையிட்டார்.
இந்த நிலையில் நேற்று இரவு நடிகை ராதா திடீரென்று வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். தொழிலதிபர் பைசூல் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், அவர் மீதான வழக்கை கைவிட்டு விடவேண்டும் என்றும் மனு எழுதி கொடுத்துவிட்டு அவசரமாக சென்றார். ஆனால் போலீசார் இதை கோர்ட்டில் போய் சொல்லுங்கள் என்று தெரிவித்தனர். அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் நடிகை ராதா காரில் ஏறி வேகமாக போய்விட்டார்.
நடிகை ராதாவின் இந்த திடீர் முடிவு போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. தொழிலதிபர் பைசூலை கைது செய்ய தேடிவரும் நிலையில் நடிகை ராதா இதுபோல் திடீரென்று புகாரை வாபஸ் வாங்கி பல்டி அடித்து இருப்பது ஏன்? அதில் உள்ள மர்மம் என்ன? பின்னணி குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
புகாரை வாபஸ் வாங்கியதற்கான காரணம் குறித்து கருத்து கேட்பதற்காக நடிகை ராதாவிடம் நிருபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டனர். அப்போது நடிகை ராதா எது எப்படியோ பைசூல் எனது கணவர் தானே! அவரும் எத்தனை நாள்தான் ஓடி ஒளிவார். தொடர்ந்து அவரை ஓட விடுவதற்கு எனக்கு மனம் இல்லை. அதனால் புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன். இதற்கு மேல் என்னிடம் எதுவும் கேட்காதீர்கள் என்று கூறி போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.
...
Actress Radha lawsuit withdrawn against businessman
செல்போனில் டி.வி. பார்க்கும் புதிய சேவை: பி.எஸ்.என்.எல். வழங்குகிறது TV on cell phone the new service will see bsnl offers
Img செல்போனில் டி.வி. பார்க்கும் புதிய சேவை: பி.எஸ்.என்.எல். வழங்குகிறது TV on cell phone the new service will see bsnl offers
சென்னை, டிச. 18–
செல்போனில் டி.வி. பார்க்கும் வசதியை பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டம் அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம், தமிழ், ஆங்கிலம் உள்பட 104 டி.வி. சேனல்களை செல்போன் மூலம் பார்த்து ரசிக்கலாம். மாதம் ரூ.81, ரூ.165, ரூ.291 ஆகிய 3 வித கட்டணங்களில் இந்த வசதி கிடைக்கிறது.
மாதம் 81 ருபாய் கட்டணம் செலுத்தினால் 15 நாட்களுக்கு, '500 எம்.பி.' அளவில் 104 டி.வி. சேனல்களை பார்க்கலாம். இதில் தூர்தர்ஷன், என்.டி.டி.வி. உள்ளிட்ட சானல்கள் கிடைக்கும்.
165 ரூபாய் கட்டணத்தில் '1ஜிபி' அளவில் 50–க்கும் மேற்பட்ட டி.வி. சேனல்களை 30 நாட்களுக்குப் பார்க்கலாம். இதில் தமிழ் டி.வி. சேனல்கள் மற்றும் கார்ட்டூன் உள்ளிட்ட சானல்கள் கிடைக்கும்.
மாதம் தோறும் 291 ரூபாய் கட்டணம் செலுத்தி '2ஜிபி' அளவுள்ள 30–க்கும் மேற்பட்ட டி.வி. சேனல்களை 30 நாட்களுக்கு பார்க்கலாம். இதில் ஆங்கில செய்தி சானல்கள், விளையாட்டு சேனல்கள் போன்றவற்றை பார்த்து ரசிக்கலாம்.
பி.எஸ்.என்.எல். செல்போன் சேவையை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாடு வட்டத்தில் (சர்க்கிள்) புதிய வாடிக்கையாளர்களுக்கு இந்த மாதம் (டிசம்பர்) 31–ந்தேதி வரை இலவச சிம்கார்டு வழங்கப்படுகிறது. இதுபோல் ரூ.220 மற்றும் ரூ.550 மதிப்புள்ள 'டாப் அப்'களுக்கு 'புல் டாக்டைம்' வழங்கப்படுகிறது. இந்த சலுகையும் 31–ந்தேதி வரை உண்டு.
பிரீபெய்டு முறையில் 'நேசம் கோல்டு' என்னும் திட்டப்படி ரூ.49 வவுச்சர் கட்டணத்தில் 180 நாட்கள் பேசலாம். சி.டி.ஏ. பிரிபெய்டு சேவை முறையிலும் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
...
My Blog List
-
-
Navy veterans of the case Italian Governments petition in the Supreme Court - Navy veterans of the case Italian Governments petition in the Supreme Court New Delhi , Jan . 15 - 2 Indian fishermen and sailors were killed in the incid...12 years ago
-
Ramya Nambeeshan Stunning Model Stills 2013 - Cute Actress shared a link. Ramya Nambeeshan Stunning Model Stills 2013 PhotoShoots - Actress HD Gallery | Stills | Photos |... Ramya Nambeeshan Stunning ...12 years ago
-
Shri Narendra Modi has been the most talked about person on Facebook, in India, for the year 2013 - *Shri Narendra Modi has been the most talked about person on Facebook, in India, for the year 2013* *According to the social networking giant’s top India...12 years ago
-
மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்: ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார் Metro rail test run will be starting tomorrow - *மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்: ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார் Metro rail test run will be starting tomorrow* சென்னை, நவ.5- சென்னையில் ரூ.14 ஆயிரத்து 600...12 years ago



